Three days back, I was listening to spotify on the way to office and ‘Kana Kaanum Kalangal’ from 7G Rainbow colony played out. As this was one of my favorite songs, I suddenly had the urge to find the lyricist and when it turned out to be Na Muthukumar, I had this sinking feeling – it is not going to happen again – he will not pen another song. Then I thought I should make a post on the song but did not get around to doing it untill today (Aug 14) and when I was reading about him I was awe stuck when I realized that today is the 10th anniversary of his death – just sheer coincidence.
For many their favorite Muthukumar song is ‘Ananda Yazhai Meetugirai’ or ‘Azhagu’ both winning him national awards. For me it is Kana Kaanum Kalangal’ (though I am also in love with ‘Ninaithu Ninaithu’ and ‘Veyilodu Vilayadi’ as well). There is something deeply energetic about ‘this ‘Kana Kaanum’ though, the lyrics are absolutely fantastic and my favorite being ” நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்”. It is a simple line but one that truly portrays the essense of being in love. Thanks to Yuvan and Selvaragavan as well for adding more flavor to the already outstanding lyrics. Below is the full song. Pink for female lines, blue for male and black for chorus.
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ஓ ஓ ஓ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும்நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்
உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழைவரும் ஓசை ஆ ஆ ஆ
[கனாக்..]
நனையாத காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால்
நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதைத் தேடி போகிறதோ
திரிதூண்டிப் போன விரல்தேடி அலைகிறதோ
தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
[கனாக்..]
இது என்ன காற்றில்
இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு..
அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம்
தூங்காமல் விடிகிறதே
விழிமூடி தனக்குள் பேசும்
மௌனங்கள் பிடிக்கிறதே..
நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
[கனாக்..]
